Featured

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics

A flow of thoughts on Lord Murugan, this murugan bakthi padal, tries to capture the emotions that pass through the heart on hearing the name of Murugan. This Murugan song in Tamil tries to visualize the positive effect Murugan's name can make in one's life. Hope this murugan song lyrics make a difference in your life.

மணி என்பது அவனோட பேரு
சுப்பிரமணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு
மணி என்பது அவனோட பேரு

அவனே என் சொக்கனுக்கப்பன், சுவாமி 
மலையிலே பிரணவத்தை அறிந்தானே சொக்கன்

கந்தா குஹா கார்த்திகேயா, என்று எப்பேரில் 
விளித்தாலும் அவன் நிழல் அங்கிருக்கும்

மணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு

இறுமாப்பு, அகங்காரம், கர்வம், எல்லாம் 
அவன் பேரை கேட்டாலே ஓடிடும் தூரம்

தினம் உன்னை நினைத்தேன் என் முருகா
அடியன் மனதிலே எப்போதும் உன்னுருவே இருக்கும்

மணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு

கஷ்டங்கள் பலவுண்டிப் பாரில், அவன் முன்னே 
நம் கஷ்டங்கள் பொடியாகிப் போகும்.

அவன் எண்ணம் மனதிலே இருந்தால், நமக்கு
பயமில்லை, இறப்பில்லை வந்திடும் ஞானம்

மணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு

முருகென்றால் அழகென்று அர்த்தம், அடியன் 
மனதிலே நிலையாய் அவன் அழகே இருக்கும்

தமிழுக்கு முழு முதற் கடவுள், சுப்ரம்மணியனை 
தொழுதால் நம் அறியாமை விலகும்

மணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு

சிவசக்தி பாலனை நினைத்தே, நம்
உடல் மற்றும் உள்ளமும் சீராகி விடுமே

நிதமும் திரு முருகனின் நாமம், அம்
மந்திரம் சொன்னாலே மனோவியாதி நாசம்

மணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு

வேலனின் நினைவே எப்பொழுதும், அவன் 
பெயர் சொன்னால் விஷமெல்லாம் தெறித்தெங்கோ ஓடும்

என்றும் குமரன் தன் புகழ் பாடு மனமே, அவனே
நம் குடும்பத்திற் கரணே, அரணே

மணி என்பது அவனோட பேரு
அவனை நினைத்தாலே மனதிலே
பேரின்ப ஆறு

மணி என்பது அவனோட பேரு

Comments

Popular Posts