, 10-Jan-2023 Skip to main content

Featured

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics A flow of thoughts on Lord Murugan, this murugan bakthi padal, tries to capture the emotions that pass through the heart on hearing the name of Murugan. This Murugan song in Tamil tries to visualize the positive effect Murugan's name can make in one's life. Hope this murugan song lyrics make a difference in your life. மணி என்பது அவனோட பேரு சுப்பிரமணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு மணி என்பது அவனோட பேரு அவனே என் சொக்கனுக்கப்பன், சுவாமி  மலையிலே பிரணவத்தை அறிந்தானே சொக்கன் கந்தா குஹா கார்த்திகேயா, என்று எப்பேரில்  விளித்தாலும் அவன் நிழல் அங்கிருக்கும் மணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு இறுமாப்பு, அகங்காரம், கர்வம், எல்லாம்  அவன் பேரை கேட்டாலே ஓடிடும் தூரம் தினம் உன்னை நினைத்தேன் என் முருகா அடியன் மனதிலே எப்போதும் உன்னுருவே இருக்கும் மணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு கஷ்டங்கள் பலவுண்டிப் பாரில், அவன் முன்னே  நம் கஷ்டங்கள் பொடியாகி

நலமாய் இரு, சுயநலமாய் இரு!


எந்த கடவுள்? யார் கடவுள்?

நம்ம நண்பர் ஒருத்தர் இருந்தாரு. ஒரு தரம் சினிமா தியேட்டருக்கு போனாரு friendsஓட. படம் ஆரம்பிச்சு ரெண்டு செகண்ட் ஆகறதுக்குள்ள சொன்னாரு "ஏம்பா, இந்த படம் நான் ஏற்கனவே பாத்துட்டேன்பா". என்னடா இன்னிக்கு release ஆன படத்தை எப்படி பாத்திருக்க முடியும்னு நண்பர்கள் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது அந்த சிங்கம் உறுமுற sceneஅ பாத்துட்டு அவர் அப்படி சொல்லிருக்காருன்னு.

எதுக்கு சொல்றேன்னா, சில பேருக்கு டைட்டில பாத்தவுடனே என்ன சொல்ல வராங்கன்னு அவங்களாவே ஊகிச்சுடுவாங்க. நீங்க அந்த மாதிரி இல்லை இல்லையா? வாங்க.

வணக்கம். நான் Alkrie.

முன்னே ஒரு முறை, நாட்டுப்பற்றை பற்றி பேசினோம். அதன் பின்னணியில், இரவு பன்னிரண்டு மணி ஆனாலும், traffic signalஐ மதித்து செல்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

ஆமா, ஊரே மதிக்கல, நான் மட்டும் மதிச்சு என்ன ஆகப்போகுதுன்னு தயவு செஞ்சு நினைக்காதீங்க. என் நாடு, என் மக்கள், என் சட்டம், நான் மதிக்கலேன்னா உலகத்துல நம்ம நாட்டை எவன் மதிப்பான்னு நினையுங்க.

சரி. இன்னைக்கு பேசப்போற topic இது தான்.  எந்த கடவுளை வணங்குவது? எந்த மதத்தை பின்பற்றுவது? எந்த மதம் உண்மையானது?

ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கிரந்தம் உள்ளது. அது கடவுள் அருளியது என்று தீர்க்கமாக விசுவசிக்கிறார்களும் கூட.

ஒரு விஷயம் நாம் எல்லோரும் ஒத்துக்கொள்வோம். எல்லா மதத்தினர்களிலும் ஏழை, பணக்காரன், கள்வன், கொடுப்பவன், கெட்டவன், நல்லவன், அன்பானவன், நயவஞ்சகன், ஆரோக்கியமிக்கவன், அது அறவே இல்லாதவன் என்று பல வகையான மக்கள் இருக்கிறார்கள்.

ஆக, இது எல்லாம், எல்லா மதத்தினருக்கும் பொது. அப்பொழுது, கடவுள் மதத்தினால் மக்களை வேறு படுத்தி பார்க்கவில்லை என்று பொருளாகிறது.

மேலும், உலகம் பூராவும், நிறைய விபத்துகள் நேர்கின்றன. பல சண்டைகள், யுத்தங்கள் நடை பெறுகின்றன. 

அந்த சண்டைகளில், யுத்தங்களில் பல தரப்பட்ட மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதில், ஏழை, பணக்காரன், எளியவன், வலியவன், குழந்தை, குமரி, முதியவர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆக, பாதிப்பு உண்டாவதற்கு மதம் அல்லாத வேறு ஏதோ காரணம் உண்டென்பது புலனாகிறது.

அது என்ன என்று பார்ப்போம். அதன் பெயர்... இயற்கை! ஆம். இயற்கை தான். அந்த இயற்கை நமக்கு கற்று கொடுக்கும் பாடம் என்ன என்று பார்ப்போம்.

நாம் எல்லோரும் சுயநலமாக இருப்பது நல்லது என்று இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஆனா, இந்த சுயநலம் நாம் இப்போது நினைத்துக்கொண்டிருக்கும் சுயநலம் அல்ல.

அப்போ, சுயநலம்னா என்னன்னு தெரிஞ்சுக்கலாம். அதுக்கு, இந்த உலகம், பிரபஞ்சம் எப்படி இயங்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது முக்கியம்.

இந்த பிரபஞ்சம் என்கிறது, ஒரு perfect system. இதில என்னன்னா நாம செய்யற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல், எதிர்வினை நடக்கும். நாம செய்யற செயல் மற்றவர்களுக்கு உபயோகமானதாக இருந்தால் நமக்கு நல்லதாகவும், எதிர்மறையான செயலாக இருந்தால் எதிர்மறையான நிகழ்வுகளும் சம்பவிக்கும்.

Bankல காசு வாங்கினா வட்டி குடுக்கணும். அதே Bankல காசு போட்டா நமக்கு வட்டி குடுப்பாங்க. செடிக்கு தண்ணி ஊத்தினா மரமா வளரும். அதே செடிக்கு வென்னி ஊத்தினா... 

படிக்கற காலத்துல நல்லா படிச்சா கிளாஸ்ல first; நல்ல வேலையில உக்காரலாம். வெட்டியா class கட்டடிச்சு சினிமா பாத்தா... பரீட்சைல கோட்டு வாழ்க்கையிலையும் கோட்டு தானே.

இயற்கையில நீர் ஒரு இடத்துல ஆவியாகி வேறு ஒரு இடத்துல மழையாய் பொழிகிறது. இது எல்லாம் ஒரு சுழற்சி, இயற்கைங்கற ஒரு system, ஒரு perfect system. இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு சொல்லி தந்து கொண்டே இருக்கிறது.

இந்த மாதிரி உதாரணங்கள் நம் வாழ்க்கையில தினமும் பாக்கலாம். 

அதனால, இப்போ உலகத்துல "நாம நினைச்சிட்டிருக்குற மாதிரி" சுயநலமா நடந்துக்கிட்டா அது நம்மை நாமே ஏமாத்திக்கற மாதிரி. இந்த system அப்படிங்கறது நாம எல்லாரையும் உள்ளடக்கினது. நாம செய்யற ஒவ்வொரு செயலும், மத்தவங்களையும், அதே சமயத்துல நம்மையும் பாதிக்கும்.

சுருக்கமா சொல்றேன். இந்த ஒரு விஷயத்தை முக்கியமா நாம புரிஞ்சுக்கணும்.

இந்த உலகத்துல நாம வாழும் வாழ்க்கை ஒரு IPL match போலத்தான். ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சப்புறம் இன்னொரு மேட்ச் இருக்கும். ஒவ்வொரு சீசன் முடிஞ்சப்புறம் இன்னொரு சீசன் இருக்கும்.

So, அதுபோல நாமளும் திரும்பவும் match விளையாட வருவோம் [ஆமாம். மறு பிறவிங்கறது அப்பட்டமான உண்மைங்க. அதை பற்றி வேறு ஒரு பதிவில பாப்போம்]. அப்போ, நாம போன matchல விளையாடுன ஆட்டத்தோட புள்ளி விவரம் (statistics) கூடவே வரும்.

நம்மளோட அடுத்த மேட்ச் நல்லா இருக்கணும்னா நம்மோட  இந்த  மேட்ச் stats நல்லா இருக்கணும்.

இந்த இரகசியத்தை அறிந்ததால் தான் நம் முன்னோர்கள் நல்லதை செய்யு, நல்லவனா இருன்னெல்லாம் சொன்னாங்க. ஏன்னா அவங்களுக்கு தெரியும் நம்ம வாழ்க்கை ஒரு மேட்சோட நிற்க போறதில்லன்னு. இதுல கடவுள்னு ஒரு அம்சத்தை கொண்டு வந்ததனால் எல்லா குழப்பங்களும் கூடவே வந்தன. என் கடவுள், உன் கடவுள், கடவுள் பாத்திட்டுருக்கார், இத்யாதி. 

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த systemல கடவுள் நேரடியா pictureலயே வர்றதில்லிங்க. கடவுள் இருக்காரா இல்லையாங்கறதே சர்ச்சைக்குரிய விஷயமா இருக்கறதுனால, அதை பிறகு பார்ப்போம்.

இயற்கையில நீர் ஒரு இடத்துல ஆவியாகி வேறு ஒரு இடத்துல மழையாய் பொழிகிறது. அதே போல வேறு ஒரு இடத்துல ஆவியாகி இந்த இடத்துல மழையாய் பெய்கிறது. இது எல்லாம் ஒரு சுழற்சி, இயற்கையின் ஒரு system.

இதே போலத்தான் கொலை, கொள்ளை, மற்ற எதிர்மறை செயல்களும். செய்யும் ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. நல்ல வினைக்கு நற்பலன், தீவினைக்கு தீய பலன். இந்த systemல நான் இந்த மதத்தை சேர்ந்தவன், அதனால் வேறு மதத்தை சேர்ந்தவனை கொன்றதனால் தண்டனை இல்லை. மாறாக, பரிசு கிடைக்கும் என்று தப்பிக்க முடியாது. கொடிய செயல்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய தண்டனை உண்டு. இயற்கைக்கு ஒரே நீதி தான்.

நாம இறந்த மறு வினாடி நாம சம்பாதிச்ச அத்தனையும் போயே போச்சு. ஊரை ஏமாத்தி இத்தனை சம்பாதிச்சு என்ன பலன்?

ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், நம் எந்த செயல்களெல்லாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கிறதோ, அதெல்லாம் எதிர்மறை செயல்கள். அவற்றை செய்வதை தவிர்ப்போம்.

உலகின் பல ஞானிகளும் இதை தான் சொல்லி வந்திருக்கிறார்கள். அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. 

An eye for an eye will leave everyone blind என்று Gandhi அவர்கள் சொன்னதாய் கேள்விபட்டிருக்கிறோம்.

Father, forgive them, for they do not know what they are doing. இது Bibleஇல்  ஏசு சொன்னதாய் காண்கிறோம்.  முன்வினைப் பயன் உண்டு என்று ஏசு நன்றாய் அறிகிறார்.

குர்ஆனில் எங்ஙனம் சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள். When someone does something that hurts you, make a promise to yourself and to Allah that you will never do the same thing to anyone else.

அதே போல், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற முனிவர்களும், சித்தர்களும் "சும்மா இரு"வென்ற பரமரகசியத்தை சொல்லி தந்திருக்கிறார்கள். நமக்கு சம்பவிப்பதெல்லாம் நாம் செய்த வினையின்  பலனே. அதற்கு மறு வினை செய்யாதிருந்து, நல்ல பல செய்கைகளினால் நமது அடுத்த ஆட்டத்தை மிகைப்படுத்டுவோம் என்பதே அறிவு.

அதனால், சுயநலமாய் இருக்க கற்று கொள்வோம். சுயநலமாய் இருக்க நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.

Comments

  1. வணக்கம்!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி!
    www.eppoluthu.blogspot.in

    ReplyDelete

Post a Comment

Popular Posts